தனியார் பேருந்து உரிமையாளர்களின் போக்குவரத்து அனுமதி பத்திரத்தினை இரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.
பயணிகள் சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் மூலம் டீசல் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
இருப்பினும் டீசலை பெற்றுக்கொண்டு சில தனியார் பஸ்கள் இதுவரை சேவையில் ஈடுபடவில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறு சேவையில் ஈடுபடாத பேருந்துகளின் போக்குவரத்து அனுமதி பத்திரம் விரைவில் இரத்து செய்யப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்த்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment