tamilni 118 scaled
இலங்கைசெய்திகள்

நூற்றுக்கணக்கான பேக்கரிகள் மீது வழக்கு

Share

நூற்றுக்கணக்கான பேக்கரிகள் மீது வழக்கு

நிறை குறைவான பாணை விற்பனை செய்த நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின் மூலமாக நிறை குறைவான பாண் விற்பனை செய்த பலர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாணின் எடை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நுகர்வோர் விவகார அதிகாரசபை சுற்றி வளைப்புக்களை மேற்கொண்டுள்ளது.

பேக்கரி மற்றும் வர்த்தக நிலையங்களை பரிசோதனைக்கு உட்படுத்திய போது உரிய எடையை கொண்டிராமை மற்றும் விலையை காட்சிப்படுத்தாமை போன்ற காரணிகளின் அடிப்படையில் பாண் உற்பத்தியாளர்கள் மற்றும் பாண் விற்பனையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...