United Nations
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்க வழிவகுக்குக! – ஐ.நா கோரிக்கை

Share

இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க இடமளிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு,

போராட்டங்களை நிதானமாக பொலிஸார் கையாள வேண்டும். வன்முறையைத் தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

அதேநேரம், போராட்டங்களை ஏற்பாடு செய்தவர்களும், ஆதரவாளர்களும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட வேண்டும். அத்தியாவசிய மருத்துவ அல்லது மனிதாபிமான சேவைகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டங்களை கண்காணிக்கவும் அறிக்கையிடவும் உரிமை உண்டு. எனவே இவற்றை செயல்படுத்துவதில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், எந்த வகையிலும் தடை செய்யக்கூடாது என்று பாதுகாப்புப் படையினருக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

பொலிஸார் மற்றும் இராணுவப்படைகள் எதிர்கொள்ளும் சவால்களை நாங்கள் அங்கீகரிக்கும் அதே வேளையில், தங்களைத் தாங்களே தாக்கிக்கொள்ளும் நிகழ்வுகள் உள்ளிட்ட பொதுமக்களைக் கையாள்வதில் வன்முறையைத் தவிர்க்கவும், மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்படவும் அரசாங்கம் காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளுக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

பொது விதியாக, பொலிஸாரை பயன்படுத்தவேண்டிய சந்தர்ப்பங்களில் ராணுவத்தை பயன்படுத்தக் கூடாது. விதிவிலக்கான சூழ்நிலைகளில், இராணுவம் சட்ட அமலாக்க செயல்பாடுகளை மேற்கொள்ளும் போது, அவர்கள் சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரங்களுக்கு கட்டுப்பட்டு, சிவில் அதிகாரிகளுக்கு முழுமையாக கீழ்ப்படிந்து சிவில் சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூற வேண்டும்.

இலங்கை மக்கள் ஏற்கனவே பாரிய துன்பங்களை அனுபவித்து வருவதுடன், உணவு, சுகாதாரம் மற்றும் கல்விக்கான உரிமைகள் உள்ளிட்ட தமது அடிப்படைத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்ற நிச்சயமற்ற நிலையில் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிறந்த வாழ்க்கை, பொருளாதார மற்றும் சமூக நெநெருக்கடிகளை தீர்க்க அமைதியான முறையில் போராட்டம் நடத்த அவர்களுக்கு உரிமை உண்டு.அதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

#SriLankanews

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...