rtjy 328 scaled
இலங்கைசெய்திகள்

சீனாவுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்ட இலங்கை

Share

சீனாவுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்ட இலங்கை

ஆராய்ச்சிக் கப்பலின் சர்ச்சைக்குரிய விஜயத்தில் இலங்கை, சீனாவுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

தற்போது கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஷி யான் 6 என்ற சீனக் கப்பல், இலங்கை கடற்படையின் கண்காணிப்பாளர்களுடன், நாளை முதல் இரண்டு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உள்ளூர் பங்காளிகளுடன் “கூட்டு ஆராய்ச்சியில்” ஈடுபட இலங்கை அனுமதி அளித்துள்ளது.

உள்ளூர் பங்குதாரராக, தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி முகமையின் (NARA) கடல்சார் விஞ்ஞானிகள் கப்பலில் இருப்பார்கள். எனினும் பங்கேற்கவிருந்த ருஹுணு பல்கலைக்கழகம் ஆய்வில் பங்கேற்காது.

அத்துடன், ஆராய்ச்சிக் கப்பலின், ஆய்வுகளும், மேல் மாகாணத்தின் நியமிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கை அதிகாரிகளுடன் சீன ஆய்வுக் கப்பல், நாளையும் நாளை மறுதினமும் நாட்டின் மேற்கு பிராந்திய கடற்பரப்பில் கடல் ஆராய்ச்சி ஆய்வுகளில் ஈடுபடவுள்ளது.

கொழும்பிற்கும் பீய்ஜிங்கிற்கும் இடையிலான பரபரப்பான இராஜதந்திர நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த கப்பலின் வருகை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...