24 663e28dec703f
இலங்கைசெய்திகள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

Share

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களது கொடுப்பனவுகள் பாரியளவில் அதிகரிக்கப்பட உள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இந்த அதிகரிப்பு தொடர்பில் அறிவித்துள்ளது.

கிரிக்கெட் வீரர்களின் நலன்புரி மற்றும் ஊக்கக் கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் ஏ அணி ஆகியனவற்றில் விளையாடி வரும் 41 வீரர்களுக்கு ஆறு தர நிலைகளின் அடிப்படையில் கொடுப்பனவு நிர்ணயிக்கப்பட உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றில் விளையாடுவதற்காக வீரர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை 100 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணிக்காக வழங்கும் பங்களிப்பு மற்றும் போட்டியில் வெளிக்காட்டும் திறமையின் அடிப்படையில் கொடுப்பனவு தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ரி20 போட்டிகளில் விளையாடும் வீரர்களின் போட்டிக் கட்டணம் 25 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தர வரிசையின் அடிப்படையிலான அடைவுகளுக்கும் கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த துடுப்பாட்டவீரர் மற்றும் சிறந்த களத் தடுப்பாளர், தர வரிசையில் 2 முதல் 10ம் இடத்தை வகிப்பவர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...