24 663e28dec703f
இலங்கைசெய்திகள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

Share

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களது கொடுப்பனவுகள் பாரியளவில் அதிகரிக்கப்பட உள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இந்த அதிகரிப்பு தொடர்பில் அறிவித்துள்ளது.

கிரிக்கெட் வீரர்களின் நலன்புரி மற்றும் ஊக்கக் கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் ஏ அணி ஆகியனவற்றில் விளையாடி வரும் 41 வீரர்களுக்கு ஆறு தர நிலைகளின் அடிப்படையில் கொடுப்பனவு நிர்ணயிக்கப்பட உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றில் விளையாடுவதற்காக வீரர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை 100 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணிக்காக வழங்கும் பங்களிப்பு மற்றும் போட்டியில் வெளிக்காட்டும் திறமையின் அடிப்படையில் கொடுப்பனவு தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ரி20 போட்டிகளில் விளையாடும் வீரர்களின் போட்டிக் கட்டணம் 25 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தர வரிசையின் அடிப்படையிலான அடைவுகளுக்கும் கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த துடுப்பாட்டவீரர் மற்றும் சிறந்த களத் தடுப்பாளர், தர வரிசையில் 2 முதல் 10ம் இடத்தை வகிப்பவர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...