25 683ad28c1544b
இலங்கைசெய்திகள்

இதைச் செய்தால் மக்கள் எம்மையும் விரட்டியடிப்பார்கள் – அமைச்சர் லால்காந்த

Share

பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியாவிட்டால் மக்கள் தம்மை விரட்டியடிப்பார்கள் என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத காரணத்தினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ஆட்சிக் காலத்தில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டதுடன் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க நேரிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு வங்குரோத்து அடைந்த நிலையில் கோட்டாபய ராஜபக்சவிற்கு பதவியை விட்டு விலக நேரிட்டது என லால்காந்த தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடன் கொடுக்க எவரும் முன்வரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் நாமும் வீட்டுக்கு செல்ல நேரிடும் எனவும் மக்கள் தம்மை விரட்டியடிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...