17 6
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்கும் மற்றுமொரு அரசியல்வாதி

Share

நாடாளுமன்ற வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்கும் மற்றுமொரு அரசியல்வாதி

76 வயதாகும் எதிர்கட்சியின் மூத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella), தனது 36 ஆண்டுகால நாடாளுமன்ற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்

அந்த வகையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே அலி சப்ரி, பந்துல குணவர்த்தன, காமினி லொக்குகே போன்றோரும் நாடாளுமன்ற வாழ்க்கைக்கு ஓய்வை அறிவித்துள்ளனர்

இந்தநிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிரியெல்ல, பல தசாப்தகால அரசியல் சேவையின் பின்னர் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவரது மகள் கண்டி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கீழ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதிப்படுத்துமாறு செய்தியாளர்கள், லக்ஷ்மன் கிரியெல்லயிடம் கேட்ட போது, ​​இந்த விடயம் இன்று வெளிப்படுத்தப்படும் என்று பதிலளித்துள்ளார்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...