pharma companies seek govt nod to hike medicine prices
இலங்கைசெய்திகள்

புற்றுநோயாளிகள் மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

Share

மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் (Trastuzumab) தடுப்பூசி உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 20 வகையான மருந்துகள் கிடைக்காததால், தொடர் சிகிச்சை நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, கண்டி தேசிய வைத்தியசாலைகள், கராப்பிட்டி மற்றும் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைகள் மற்றும் மஹரகம வைத்தியசாலைகள் உட்பட பல வைத்தியசாலைகளில் trastuzumab தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகள் இல்லை என சுகாதார அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1000 மார்பக புற்றுநோய் தடுப்பூசிகளை பெறுவதற்கு கொள்வனவு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் சுமார் 500 தடுப்பூசிகள் பெறப்பட்டு வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

புற்று நோயாளர்களுக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்க வேண்டியுள்ள போதிலும், இந்த மருந்துகள் இல்லாததால் நோயாளர் பராமரிப்பு சேவைகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹரகம வைத்தியசாலையில் வருடாந்தம் சுமார் 3,000 புற்று நோயாளர்கள் சிகிச்சைக்காக வருவதாகவும், நாளாந்தம் சுமார் 1,000 நோயாளர்கள் உள்நோயாளிகளாகவும் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடு: ஈறு நோய் பாதிப்பு அதிகரிப்பு – எச்சரிக்கை விடுத்த வைத்தியர்!

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாக வாய் சுகாதார விசேட...

09 6
செய்திகள்இலங்கை

பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு: பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பேரிடர் நிலைகளின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...

08 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகத்தை எளிமைப்படுத்தும் புதிய செயலி: யாழ். இந்துக் கல்லூரி மாணவரின் புத்தாக்கம்!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சவால்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர...

01 6
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் மற்றும் அவரது துணைவர் சடலமாக மீட்பு: காவல்துறை விசாரணை!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், ஹேர்ன்ஸ் ஓக் (Hernes Oak) எனும் கிராமப்புறப்...