gotta
அரசியல்இலங்கைசெய்திகள்

பதவி விலகச் சொன்ன கோட்டா! – பிடிவாதம் பிடிக்கும் ஆளுங்கட்சியினர்

Share

அரசியல் நெருக்கடிக்கு உடனடி தீர்வாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட மூன்று யோசனைகளில் இரண்டை ஆளுங்கட்சியினர் ஏற்க மறுத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதியால் முன்று யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

சிரேஷ்ட உறுப்பினர்கள் அமைச்சரவையில் இருந்து விலகி, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது முதல் யோசனை.

இதற்கு மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, பந்துல குணவர்தன, காமினி லொகுகே ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், சரத் வீரசேகர இந்த யோசனையை ஏற்க மறுத்துள்ளார்.

அடுத்தாக பிரதமர் பதவி விலகி, அரசை நடத்துவதற்கான வாய்ப்பை எதிரணிக்கு வழங்குவதல் என்பது இரண்டாவது யோசனையாகும். இந்த யோசனைக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை. ஆளுங்கட்சிவசம் 113 என்ற சாதாரண பெரும்பான்மை இருப்பதால் அதற்கான தேவை எழவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

மூன்றாவதாக நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஆளுங்கட்சியினர் உடன்படவில்லை.

நேற்றைய கூட்டம் இறுதி முடிவு எட்டப்படாமல்தான் நிறைவடைந்துள்ளது. இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

MediaFile 6 1
இலங்கை

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தைக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அஞ்சலி!

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...