கோப்பாய் பூதர்மடம் பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த கும்பல் வாடகைக்கு அமர்த்திச் சென்ற ஓட்டோ சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை மாலை இச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் கதிர்காமநாதன் குணரட்ணசிங்கம் (வயது-58) படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் அவர்களது அயலில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும் இடையில் கருத்து வேறுபாடுஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர்களை பழிவாங்குவேன் என கூறிய குறித்த இளைஞன் வன்முறை கும்பலை வரவழைத்து வன்முறையில் ஈடுபடவைத்தார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையில் முறைப்பாடு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்டோர் நீர்வேலியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் சென்ற ஓட்டோ சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 9 பேர் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
https://tamilnaadi.com/news/local/2021/10/22/graduation-day-sword-team-attakasam/
#SriLankaNews
Leave a comment