செய்திகள்இலங்கைபிராந்தியம்

கோப்பாய் வன்முறை! – மூவர் கைது

Share

கோப்பாய் பூதர்மடம் பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த கும்பல் வாடகைக்கு அமர்த்திச் சென்ற ஓட்டோ சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மாலை இச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் கதிர்காமநாதன் குணரட்ணசிங்கம் (வயது-58) படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் அவர்களது அயலில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும் இடையில் கருத்து வேறுபாடுஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர்களை பழிவாங்குவேன் என கூறிய குறித்த இளைஞன் வன்முறை கும்பலை வரவழைத்து வன்முறையில் ஈடுபடவைத்தார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்டோர் நீர்வேலியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் சென்ற ஓட்டோ சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 9 பேர் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://tamilnaadi.com/news/local/2021/10/22/graduation-day-sword-team-attakasam/

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...