கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கைசெய்திகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபடும் போது அதற்கான பாதீட்டை தாக்கல் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (20.07.2023) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதிபதி ரி.பிரதீபன் முன்னிலையில் இது தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சட்டவைத்திய அதிகாரி வாசுதேவவினால் புதைகுழி அகழ்வுக்கான செலவு குறித்த உத்தேச பாதீடு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

அகழ்வு பணியை மேற்கொள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் புஷ்பரட்னத்துடன், ராஜ் சோமுதேவா ஆகியோரை நீதிமன்றம் அழைத்துள்ளது.

இதேவேளை, தொல்பொருள் திணைக்களம் இன்று நீதிமன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...