rtjy 133 scaled
இலங்கைசெய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அடுக்கடுக்காக உடலங்கள்

Share

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் அடுக்கடுக்காக உடலங்கள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மனித எச்சங்களின் அகழ்வு பணிகள் கடந்த 06.09.23 அன்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அகழ்வு பணியின் ஐந்தாவது நாளான (11.09.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவர், மூன்று உடற்பாகங்கள் மீட்கப்பட்டதாகவும், ஏற்கனவே மீட்கப்பட்ட இரண்டு உடற்பாகங்களுடன் ஐந்து உடற்பாகங்கள் மொத்தமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

13 மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் மேலும் குறித்த புதை குழியில் ஒன்றன் மேல் ஒன்றாக நெருக்கமாக உடலங்கள் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

மேலும், மிக மிக நெருக்கமாக பல மனித எலும்பு கூட்டு தொகுதிகள் காணப்படுகின்றன எனவும் அகழ்வு பணி தொடங்கியதில் இருந்து இதுவரை ஐந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

நேற்று எடுக்கப்பட்ட மனித எச்சத்தில் துப்பாக்கிச் சன்னம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...

02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட்,...

01 17
செய்திகள்விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கின்றது: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ஒன்றுகூடல்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...

29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...