செய்திகள்அரசியல்இலங்கை

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்உற்பத்தி விவகாரம் – மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Share
norochchola power
Share

” கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் ஆரம்பக்கட்ட உடன்படிக்கை மட்டுமே கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்னும் இரு உடன்படிக்கைகள் உள்ளன. அந்த உடன்படிக்கைகளே முக்கியமானவை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசுகர தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற பங்காளிக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் பற்றி விவரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” உரப்பிரச்சினை, யுகதனவி விவகாரம், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உட்பட பல விடயங்கள் தொடர்பில் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியமை தொடர்பில் எமது நிலைப்பாட்டை அறிவித்தோம். அதன்போது ஆரம்பக்கட்ட உடன்படிக்கையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இன்னும் 2 உடன்படிக்கைகள் உள்ளன. அவையே முக்கியமானவை. எனவே, தேவையான யோசனைகளை முன்வைக்குமாறு நிதி அமைச்சர் எமக்கு தெரியப்படுத்தினார்.” – என்றார் தயாசிறி ஜயசேகர.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...