இதுவரை சபையில் முன்வைக்கப்படாத கெரவலப்பிட்டிய விவகாரம்!!

Anura Dissanayake in Parliament.jpg

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கை இன்னும் சபையில் முன்வைக்கப்படவில்லை. எனவே, அது உடனடியாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று சபையில் வலியுறுத்தினார்.

” திறைசேரி செயலாளருக்கும், அமெரிக்க நிறுவனத்துக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, அதனை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் கோரிக்கை விடுக்கவேண்டும்.” – என்றும் அநுர குறிப்பிட்டார்.

அதேவேளை, நாடாளுமன்றத்துக்கே நிதி அதிகரம் உள்ளது. எனவே, உடன்படிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சருக்கு அறிவிக்குமாறு சபாநாயகரிடம் ரணில் விக்கிரமசிங்க, லக்‌ஷ்மன் கிரியல்ல ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

#SrilankaNews

Exit mobile version