tamilni 300 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென நீக்கப்பட்ட கட்டுப்பாடு

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென நீக்கப்பட்ட கட்டுப்பாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் குற்றவாளிகளை சிக்க வைப்பதற்காக பாதுகாப்பு பிரதானிகளால் ஆரம்பிக்கப்பட்ட புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயர் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர்கள், புலனாய்வுத் தலைவர்கள், குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் விமான நிலையத் தலைவர் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

அங்கு தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குற்றவாளிகள் மற்றும் ஆட்கடத்தல்காரர்கள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு கவுண்டர் ஊடாக எவ்வாறு பதுங்கிச் செல்கின்றனர் என்பதை புலனாய்வு பிரிவின் தலைவர்கள் விபரித்துள்ளனர்.

இந்த தகவல்களை சுட்டிக்காட்டிய பின்னர், குடிவரவு கவுன்டர்களுக்கு மக்கள் வரும் வரிசைக்கு ஏற்ப கவுன்டர்களை சரிபார்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்காக, குடிவரவுத் திணைக்களத்தின் வழிகாட்டி அதிகாரி ஒருவரை முன்னால் நிறுத்தி, வரிசையாக கவுன்டர்களுக்கு மக்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் இந்த சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

செயற்பாடு தொடங்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, மேலிடத்திலிருந்து வந்த உத்தரவிற்கமைய அதை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு கவுன்டரில் பயணிகளை அவர்கள் விரும்பியவாறு செல்ல அனுமதிப்பதால், கடத்தல்காரர்களுடன் நட்புறவு கொண்ட அதிகாரிகள் இருக்கும் போது, ​​கடத்தல்காரர்கள் அந்த கவுன்டர்களை தெரிவு செய்து நாட்டிற்குள் பிரவேசிப்பதும் இந்த கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

அண்மையில் பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ குடிவரவு குடியகல்வு அதிகாரி ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிடிபட்டதாக பொலிஸ் மா அதிபர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
நகைகளை வைத்து சூதாடிய குருக்கள்
இலங்கை

ஆலய நகைகளை திருடி சூதாடிய குருக்கள்!

கொழும்பு – கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கடந்த மாதம் 29ஆம் திகதி ஆலய...

Court order 3
இலங்கை

புலிகளின் முகாம் தொடர்பில் வதந்தி – சந்தேக நபருக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

சமூக வலைத்தளங்களில் கிளிநொச்சி, பளை வனப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக போலித் தகவலை வௌியிட்ட...

Accidentkojioh
இலங்கை

திருமணத்திற்கு 2 நாள் வெளிநாடு செல்ல 3 நாள் இளைஞர் விபத்தில் பலி!

மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25...

ஷிரான் பாசிக்
இலங்கை

வறுமைக்கோட்டிலிருந்து டுபாய் வரை ஷிரான் பாசிக் தொடர்பில் வெளியாகும் உண்மைகள்!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன....