tamilni 299 scaled
இலங்கைசெய்திகள்

சர்வதேச விசாரணைக்கு தயார்: அசாத் மௌலானா

Share

சர்வதேச விசாரணைக்கு தயார்: அசாத் மௌலானா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையின் முன்பாக சாட்சியமளிக்க தாம் தயார் என அசாத் மௌலானா அறிவித்துள்ளார்.

ஜெனிவாவில் அறிக்கையொன்றை வெளியிட்ட மௌலானா, சுயாதீன விசாரணை ஒன்றின் முன்னால், தான் சாட்சியமளிக்க தயார் என குறிப்பிட்டுள்ளார்.

இது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரித்தானியாவின் சனல் 4 மூலம் செப்டம்பர் 5 ஆம் திகதி ஒளிபரப்பப்பட்ட “இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள்” என்ற ஆவணப்படம் இலங்கையில் கணிசமான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த ஆவணப்படம் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு ஆதரவை உருவாக்கியுள்ளது.

எனினும் நிறைய வதந்திகள் மற்றும் போலி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கூட அவதூறு செய்து சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

தாம் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் பணியாற்றிய போதும், தாம் ஆயுத பயிற்சி பெற்ற போராளி அல்ல.

இதன் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பல அரசியல் கொலைகள் தொடர்பான முக்கியமான மற்றும் இரகசியத் தகவல்கள் தனக்குக் கிடைத்தன” என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...