24 660bbc15e76d4
இலங்கைசெய்திகள்

வலுக்கும் கச்சத்தீவு விவகாரம்: ஜீவன் தொண்டமான் பதிலடி

Share

வலுக்கும் கச்சத்தீவு விவகாரம்: ஜீவன் தொண்டமான் பதிலடி

கச்சத்தீவை (Katchatheevu) இந்தியா (India) திருப்பி தருமாறு கோரிக்கை விடுத்தால், அதற்கு இலங்கை வெளியுறவுத் துறை தகுந்த பதில் அளிக்கும் என தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு இது இந்திய மக்களவைத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக (BJP) மாநில தலைவர் அண்ணாமலை (Annamalai) மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கச்சத்தீவு விவகாரத்தில் திமுக (DMK) மற்றும் காங்கிரஸ் (Congress) அரசை கடுமையாக சாடி வருகின்றனர்.

இந்நிலையிலேயே, அவர்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஜீவன் தொண்டமான் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், கச்சத்தீவு விவகாரம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இந்தியா வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கச்சத்தீவு தற்போது இலங்கையின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...