CEB
இலங்கைசெய்திகள்

களனிதிஸ்ஸ இ.மி.ச வசம்!!

Share

163 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சொஜிட்ஸ் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தை தாம் கையகப்படுத்தி உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமான சொஜிட்ஸ் களனிதிஸ்ஸவினால் இயக்கப்பட்டு வந்த 163 மெகாவோட் சுழற்சி மின் நிலையம் மார்ச் 28 ஆம் திகதி கையகப்படுத்தப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் சொந்த மின் நிலையத் திறனை 163 மெகாவோட்டால் அதிகரிக்கச் செய்துள்ளதாக  சபை குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக பொருளாதார தடைகள் காரணமாக சவால்கள் மற்றும் சட்ட அம்சங்கள் உட்பட பல சிக்கல்கள் மின்சார சபையின் பேச்சுவார்த்தைகள் மிகவும் கடினமாக இருந்த போதும் சபை அதை சமாளித்து ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தை  வெற்றிகரமாக கையகப்படுத்தியுள்ளது.

2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரசாங்கக் கொள்கை கட்டமைப்பின் கீழ், சொஜிட்ஸ் களனிதிஸ்ஸ தனியார் நிறுவனத்துடன், ஒரு சுயாதீன மின் உற்பத்தியாளராக கையொப்பமிட்டதாக சபை சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த ஒப்பந்தம் 20 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்ற நிலையில், மின் கொள்வனவு ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி 2022 ஆம் ஆண்டு மின்நிலையத்தை கையகப்படுத்துவதற்கான செயல்முறை மின்சார சபையினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...