25 68493bff4b797
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அநுர அரசு! 15 வீதத்தால் அதிகரித்தது மின் கட்டணம்

Share

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15 வீதத்தால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மின் கட்டண திருத்தம் இன்று நள்ளிரவு(12) முதல் நடைமுறைக்கு வருவதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பி.எல். சந்திரலால் இதனைத் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் இலங்கை மின்சார சபை (CEB) 2025ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மின்சார கட்டணங்களை 18.3 வீதத்தால் அதிகரிக்குமாறு முன்மொழியப்பட்டிருந்தது.

எனினும், தற்போது 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய...

24514649 rain
செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டி20 ரத்து செய்யப்பட்ட போட்டியின் நுழைவுச்சீட்டுகள் நாளை செல்லுபடியாகும்!

மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக...

AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில்...

06 1
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ஆம் ஆண்டு இலங்கையின் பாரிய வீட்டு நிர்மாண ஆண்டு: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரகடனம்!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ்,...