24 6648558c61193
இலங்கைசெய்திகள்

நீதி தேடும் மக்களுக்கு அமெரிக்கா பங்காளியாக இருக்கும் : ஜூலி சங்

Share

நீதி தேடும் மக்களுக்கு அமெரிக்கா பங்காளியாக இருக்கும் : ஜூலி சங்

இலங்கையின் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அமெரிக்க அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் ஐக்கியப்பட்ட எதிர்காலத்திற்கான உறுதியையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் வகையில், அனைத்து இலங்கையர்களுடனும் ஐக்கியமாக இருப்பதாக அமெரிக்கா(United States) உறுதியளித்துள்ளது.

இது தொடர்பில் எக்ஸ் பதிவில் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung), நீதி சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை தொடர்ந்து தேடும் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா உறுதியான பங்காளியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், நிலையான சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான பன்முகத்தன்மையை உள்ளடக்கிய வளமான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு அமெரிக்காவின் உறுதிப்பாட்டையும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...

army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...