1
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகம் முன் நீதி வேண்டி ஊடகவியலாளர்கள் போராட்டம்!

Share

சர்வதேச ஊடக சுதந்திர தினமான நேற்று (மே 03) கொழும்பில் ஊடகவியலாளர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

கொழும்பு – காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் சிலைக்கு முன்னால் நேற்று மாலை ஒன்றுகூடிய இளம், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை சென்றனர்.

அவர்கள், ஜனாதிபதி செயலகம் முன் நீதி வேண்டி, கோஷங்களை எழுப்பி, கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் மதகுருமார்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின் இறுதியில், பொலிஸாரினால் அண்மையில் அகற்றப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டுத் தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் நிழல் படங்கள் மீண்டும் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக வைக்கப்பட்டன.

2

3

4

67

DSC 8017 scaled

DSC 8008 scaled

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...