WhatsApp Image 2022 03 28 at 2.34.19 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

குறுகிய கொள்கையுடையோருடன் இணையோம்!

Share

” குறுகிய அரசியல் நோக்கங்களை அடைவதற்காக செயற்படும் கட்சிகளுடன் இனி கூட்டணி வைத்துக்கொள்ளப்படமாட்டாது.” – என்று ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த அறிவிப்பை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசாங்கம் மாறினாலும் தேசியகொள்கையென்பது மாறக்கூடாது. ஆனால் எமது நாட்டில் அந்த கொள்கை மாறுவதே நெருக்கடி நிலைமைக்கு ஓர் காரணமாகும். எமது திட்டங்களை குழப்பியடித்தவர்கள் இன்று வெளியேறிவிட்டனர்.

எனவே, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை மட்டுமே இலக்காகக் கொண்டும், நாடாளுமன்ற ஆசன இருப்புக்காகவும் கூட்டணி வைத்துக்கொள்ள முன்வரும் கட்சிகளும் எமது அணியில் இனி இடமில்லை.

நாட்டின் எதிர்காலம் கருதி, எமது கொள்கைகளை ஏற்கக்கூடியவர்கள் இணையலாம். ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...