WhatsApp Image 2022 03 28 at 2.34.19 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

குறுகிய கொள்கையுடையோருடன் இணையோம்!

Share

” குறுகிய அரசியல் நோக்கங்களை அடைவதற்காக செயற்படும் கட்சிகளுடன் இனி கூட்டணி வைத்துக்கொள்ளப்படமாட்டாது.” – என்று ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த அறிவிப்பை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசாங்கம் மாறினாலும் தேசியகொள்கையென்பது மாறக்கூடாது. ஆனால் எமது நாட்டில் அந்த கொள்கை மாறுவதே நெருக்கடி நிலைமைக்கு ஓர் காரணமாகும். எமது திட்டங்களை குழப்பியடித்தவர்கள் இன்று வெளியேறிவிட்டனர்.

எனவே, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை மட்டுமே இலக்காகக் கொண்டும், நாடாளுமன்ற ஆசன இருப்புக்காகவும் கூட்டணி வைத்துக்கொள்ள முன்வரும் கட்சிகளும் எமது அணியில் இனி இடமில்லை.

நாட்டின் எதிர்காலம் கருதி, எமது கொள்கைகளை ஏற்கக்கூடியவர்கள் இணையலாம். ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...