26 10
இலங்கைசெய்திகள்

வழக்குகளை தவிர்க்கும் ஜொன்ஸ்டன்

Share

வழக்குகளை தவிர்க்கும் ஜொன்ஸ்டன்

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சுகவீனத்தைக் காரணம் காட்டித் தனக்கு எதிரான வழக்குகள் மற்றும் விசாரணைகளில் முன்னிலையாகாமல் தப்பித்துக் கொள்ள முயற்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சட்டரீதியாக பதிவு செய்யப்படாத பென்ஸ் வாகனமொன்றைப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ள கடந்த வௌ்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

எனினும், மருத்துவக் காரணங்களினால் தன்னால் சமூகமளிக்க முடியாதிருப்பதாகவும், வேறொரு தினத்தை அதற்காக ஒதுக்கித் தருமாறும் அவர் தனது சட்டத்தரணி ஊடாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வர்த்தக அமைச்சராக செயற்பட்ட காலத்தில், சதொச நிறுவனத்தின் ஊழியர்களை தனது அரசியல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்திக் கொண்ட குற்றச்சாட்டின் கீழ் ஜொன்ஸ்டனுக்கு எதிராக விசாரிக்கப்படும் வழக்கு நேற்றைய தினம் (15) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த நல்லாட்சிக் காலத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. நல்லாட்சி அரசாங்கம் பதவியில் இருந்து அகலும் வரைக்கும் குறித்த வழக்கில் ஜொன்ஸ்டன் நீதிமன்றத்துக்கு முன்னிலையாகாமல் பல்வேறு காரணங்களை முன்வைத்து தப்பித்துக் கொண்டிருந்தார்.

அதேபோன்று, நேற்றைய விசாரணைக்கும் அவர் முன்னிலையாகவில்லை. அதற்குப் பதிலாக அவர் சுகவீனமுற்றிருப்பதாக மருத்துவ அறிக்கையொன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...