17 14
இலங்கைசெய்திகள்

விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை ஆராய மகிந்த முன்னெடுத்த நடவடிக்கை

Share

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் வடக்கு – கிழக்கு பிரதேசங்கள் இருந்த சந்தர்ப்பத்தில், அவர்களால் சேமிக்கப்பட்ட தங்க நகைகள் தொடர்பில் ஆராய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இராணுவம் ஒரு விசேட நடவடிக்கையை மேற்கொண்டது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் தலையீட்டால், 2014 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தின் போது, ​​இந்த தங்கப் பொருட்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான யுத்த முடிவின் பின்னர், முழு வடக்கு மாகாணமும் அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரப்பட்டது.

இராணுவத்தால் அப்போது கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பெறப்பட்டது என்று சிலர் குற்றம் சாட்டினர்.

உண்மையில், தங்கப் பொருட்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து திகதிகள் மற்றும் ஆதாரங்களுடன் தெளிவான வெளிப்படுத்தல் காணப்படுகிறது.

வங்கிகளில் உள்ள தங்கப் பொருட்களின் ஆவணங்களுடன் தொடர்புடையவர்களைத் தேடுவதற்காக இராணுவம் ஒரு பெரிய நடவடிக்கையை மேற்கொண்டது.

மகிந்தவின் தலையீட்டால், 2014 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தின் போது, ​​இந்த தங்கப் பொருட்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதன்போது தங்கம் தொடர்பான ஆவணங்கள் உரியவர்களால் கொண்டு வரப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டன.

இந்த நடவடிக்கையை நிரூபிக்க தெளிவான ஆவணங்களுடன் ஏராளமான ஆதாரங்கள் இணையத்தில் உள்ளன.

உரிமை கோரப்படாத நகைகளே இவ்வாறு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இவ்வளவு காலமும் இருந்து வந்தன.

இந்த நகைகளை தேர்தலை இலக்கு வைத்தே இராணுவத்திடம் இருந்து பெற்று பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான ஒரு நகர்வை தற்போதைய அரசாங்கம் முன்னேடித்திருந்தது.

குறிப்பாக இராணுவமும் பொலிஸாரும் அண்ணன், தம்பி போன்றவர்கள் என்பதை நினைவில் நாம் கொள்ள வேண்டும்.

ஆனால், சமூகத்தின் பெரும்பான்மையானவர்கள் இன்னும் மகிந்த இந்த தங்கத்தை தனது நெருங்கிய குடும்ப நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார் என்று நினைக்கிறார்கள்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...