இலங்கைசெய்திகள்

1350 ரூபாய் பெற்றுக்கொடுத்தது பாரிய வெற்றி: ஜீவன் விளக்கம்

19 12
Share

1350 ரூபாய் பெற்றுக்கொடுத்தது பாரிய வெற்றி: ஜீவன் விளக்கம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் பெற்றுக் கொடுக்காமல் 1350 ரூபாய் பெற்றுக்கொடுத்துள்ளீர்கள் என பலர் விமர்சனம் செய்கின்றனர் என தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், 1700 ரூபாய் பெற்று தருகிறேன் என்று சொல்லியிருந்தேன், இருந்தபோதிலும் 1350 பெற்று கொடுத்துள்ளோம். இதுவே எங்களுக்கு பெரிய வெற்றி ஆகும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர், தெரிவிக்கையில், வரலாற்றில் முதல் தடவையாக அக்கரபத்தனை பகுதிக்கு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

அதேபோல் இதுவரையும் மலையகத்தை நாங்கள் எந்த இடத்திலும் தலைகுனிய வைத்ததில்லை அதுதான் எமது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.

1350 ரூபாய் பெற்றுக்கொடுத்தது பாரிய வெற்றி: ஜீவன் விளக்கம் |

அதேபோல் ஒரு சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களே 2018 ஆம் ஆண்டு 50ரூபாய் வாங்கி தருகிறேன் என்று கூறினர். இதுவரைக்கும் பெற்றுக் கொடுத்தார்களா? இல்லை.

அதேபோல் சஜித் பிரேமதாசவும் சிறு தோட்ட உரிமையாளர் ஆக்குகிறேன் என்று சொல்கின்றார். நடைமுறைப்படுத்துவதை சொல்ல வேண்டும். அதை விடுத்து பொய்களை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்” என்றார்.

Share
Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...