24 66e525941aa93
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசைக் கவிழ்க்க வன்முறைப் போராட்டங்களை நடத்திய அநுர தரப்பு

Share

இலங்கை அரசைக் கவிழ்க்க வன்முறைப் போராட்டங்களை நடத்திய அநுர தரப்பு

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னணி வேட்பாளராக களமிறங்கிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான கட்சி, இலங்கை அரசைக் கவிழ்க்க இரண்டு வன்முறைப் போராட்டங்களை நடத்தியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் மற்றும் தேசிய அதிகார எழுச்சி தொடர்பிலான விசேட அறிக்கையொன்றை முன்வைக்கும் போதே குறித்த செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய புவிசார் அரசியல் போட்டியாளரான சீனாவுடன் தேசிய மக்கள் சக்தி நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி உத்தியோகபூர்வமாக ஆதரவளிக்காவிட்டாலும், தினசரி போராட்டங்கள் நடத்தி, காலி முகத்திடலில் கூடாரம் போட்டு, பொது வேலைநிறுத்தங்களை நடத்தி பெரும் பங்காற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1971 மற்றும் 1988 க்கு இடையில் ஜனதா விமுக்தி பெரமுனாவால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதமேந்திய எழுச்சி இலங்கை வரலாற்றில் ஒரு இரத்தக்களரி காலகட்டம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பரவலான கொலைகள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற ஊரடங்குச் சட்ட மீறல்கள் நடந்ததாகவும் கூறுகிறது.

எவ்வாறாயினும், தோல்வியடைந்த கலவரத்தின் பின்னர் கட்சி வன்முறையை கைவிட்டு தேர்தல் ஜனநாயகத்தின் பக்கம் திரும்பிய வேளையில் அநுர கட்சியின் அரசியல் குழுவிற்கு நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அநுர கட்சித் தலைவராக பதவியேற்ற பின்னர், வரலாற்றில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச கூடகம் ஒன்றிடம் மன்னிப்பு கோரியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
நிலந்த பிரேமரத்ன
இலங்கை

நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவத் தளபதியாக நியமனம்.

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவர் இந்த நியமனத்துடன்...

death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...