உள்ளுராட்சி மன்ற தேர்தலின் எதிரொலி! அநுர கட்சியின் அதிரடி அறிவிப்பு

11 7

வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்காது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு ஊழல் இல்லாத தேசிய சீர்திருத்த திட்டத்தை தொடர ஒரு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தனி ஒரு கட்சியாக தேசிய மக்கள் சக்தி தெளிவான மற்றும் முன்னணி வெற்றியைப் பெற்றுள்ளது. இது சிறப்பு வாய்ந்தது. அதிகாரங்களை நிறுவுவதற்கு சுயாதீன குழுக்களுடன் இணைந்து செயல்பட தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.

ஆனால் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்காது. முன்னணி கட்சியாக, எங்களுக்கு ஆட்சி செய்ய உரிமை உண்டு.

தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version