செய்திகள்இலங்கை

நிகழ்நிலையில் யாழ். பல்கலை பட்டமளிப்பு

jaffna 720x375 1
Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு நிகழ்வின் இரண்டாவது பகுதி பட்டமளிப்பு இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா தலைமையில்
கைலாசபதி கலையரங்கில் பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

சம்பிரதாயபூர்வ பட்டமளிப்பு விழாவை, கொவிட் பரவல் காரணமாக நடாத்துவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனுமதி மறுத்திருந்தார்.

பட்டக்கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களின் நன்மைக்காக, பட்டங்களை உறுதிப்படுத்தி, நிகழ்நிலையில் பட்டமளிப்பு விழாவை நடாத்த முடிவு செய்யப்பட்டதற்கு இணங்க, இன்று நிகழ்நிலையில் பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இரண்டு அமர்வுகளாக இடம்பெற்ற பட்டமளிப்பு நிகழ்வில், துறைசார் பீடாதிபதிகளால் பட்டங்களை நிறைவு செய்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டன.

கொவிட் பரவல் நிலை பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர், சம்பிரதாயபூர்வ பட்டமளிப்பு வைபம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு பயணிக்கவேண்டாம்; அமெரிக்கா உட்பட நாடுகள் விடுத்துள்ள பயண எச்சரிக்கை

இந்தியா நிகழ்த்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பயணிப்பதற்கெதிராக அமெரிக்கா உட்பட பல நாடுகள்...

12 8
இலங்கைசெய்திகள்

தலைக்கவசம் அணிந்து நடமாடுவோருக்கு எச்சரிக்கை !

உந்துருளிகளில் பயணிக்கும் போது, முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்திருப்பவர்களுக்கு இலங்கை பொலிஸ் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை...

14 8
இலங்கைசெய்திகள்

சஜித் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் ரணில் கட்சி

எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டு நிர்வாகங்களை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என்று...

13 8
இலங்கைசெய்திகள்

முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் தெரிவு

முன்னிலை சோசலிசக் கட்சிக்கான முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜே.வி.பி.யின் முன்னாள்...