யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்படுகிறது என மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.
கடந்த சில மணித்தியாலங்களில் யாழ். மாவட்டத்தின் பல பிரதேசங்களில் 200 மில்லிமீற்றர் கனமழை பதிவாகியுள்ளது. இதனை திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் அறிக்கையிட்டுள்ளது.
இந்த கனமழை காரணமாக யாழ். மாவட்டத்தின் பெரும் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. மாகாண ஆளுநருடன் மேற்கொண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment