யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கமும் போராட்டத்தில் குதிப்பு!

யாழ்ப்பாண பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் ஆகியவையும் இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன.

ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பன யாழ் பல்கலைகழக முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டன.

a18e6c1d a05e 4c7a b684 9c5f2b5df976

#SriLankaNews

Exit mobile version