tamilni 6 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் கோவில்களை உடைத்த சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் 3 கோடி

Share

யாழில் கோவில்களை உடைத்த சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் 3 கோடி

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நான்கு கோவில்களை உடைத்து பணம் மற்றும் தங்கப் பொருட்களை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவரின் வங்கிக் கணக்குகளில் சுமார் மூன்று கோடி ரூபா பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் பகுதியில் உள்ள நான்கு பிரதான கோவில்களில் கொள்ளையடிப்பதற்காக இந்த கொள்ளையன் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

இந்தக் கொள்ளைச் சம்பவங்களின் பின்னர் கொழும்பு திரும்பிய அவர், மீண்டும் ஆலயம் ஒன்றில் கொள்ளையடிக்க யாழ்ப்பாணம் சென்ற போது மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் கோவில்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் உள்ள காட்சிகளின் உதவியுடன் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...