download 2 1 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ் போதனாவில் ஊடகவியலாளர் சந்திப்பு!

Share

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண ஒருங்கிணைப்பாளர் தனிகாசலம் மயூரன் அவர்களின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிறுவர் வைத்திய நிபுணர்கள் நான்கு பேர் நாட்டை விட்டு வெளியேறி உள்ள நிலையில் வைத்தியசாலையின் சிறுவர் விடுதி மூடப்பட்டமை தொடர்பில் ஆங்கில பத்திரிகைகளில் செய்தி வெளி வந்திருந்தது.

இதே நிலைமை யாழ்ப்பாணத்திலும் எதிர்வரும் காலங்களில் இடம் பெறலாம் என நாங்கள் அச்சப்படுகின்றோம்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பது மருத்துவ மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுக்கு உரிய ஒரு வைத்தியசாலை.

நோயாளர்களின் பிரச்சனைக்கு மேலதிகமாக , இந்த அரசாங்கத்தின் செயல்பாடு காரணமாக மருத்துவ மாணவர்களின் கல்விக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இது இலங்கை பூராக உள்ள வைத்தியசாலைகளில் இருந்து ,  வைத்தியர்கள் வைத்திய நிபுணர்கள் , மற்றும் அனைத்து தரப்பினர்களும் எமது நாட்டுக்கு அவசியமான கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறு நிலையில் ஏற் பட்டுள்ளது.

இந்த நாட்டை விட்டு வெளியேறுவது என்பது அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றது அந்த அடிப்படையில்  தற்பொழுது எமது கண்ணுக்கு முன்னால் அனுராதபுரம் வைத்திய சாலையின் சிறுவர் விடுதி மூடப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல மாதங்களாக நாங்கள் கூறி வருகின்றோம் , எமது நாட்டில் இருந்து புத்திஜீவிகள் வெளியேறுகின்றனர்.

இது சம்பளப் பிரச்சினை மாத்திரமல்ல, எதிர்காலம் தொடர்பான அச்சத்தை தோற்றுவித்து வைத்துள்ளது.

இந்த நாட்டில் இருப்பதில் தொடர்கின்ற அச்சம்.  எமது அவதானிப்பில் பெரும்பாலான வைத்தியர்கள்  இந்த நாட்டில் தங்கி இருந்து சேவை செய்வதை விரும்புகின்றனர்.

இருந்தாலும் குறிப்பிட்ட பகுதியினர் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...