20220601 095248 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பொது நூலகம் எரிப்பின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Share

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம் பொது நூலகத்தை உருவாக்குவதற்குக் காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பாவுக்கும், யாழ். பொது நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன், பிரதி மேயர் து.ஈசன், யாழ். மாநகர ஆணையாளர் ஜெயசீலன், யாழ். பொது நூலக பிரதம நூலகர், யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், வாசகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் பொது நூலகம்1981ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி தென்னிலங்கையிலிருந்து வந்த வன்முறைக் குழுவொன்றால் தீயூட்டப்பட்டது. நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97 ஆயிரம் அரிய நூல்கள் இருந்ததுடன், தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் அது திகழ்ந்தது.

VideoCapture 20220601 103051 1

VideoCapture 20220601 103055 1

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
rent 1200px 05 09 23
செய்திகள்இலங்கை

50 ஆண்டுகால வாடகைச் சட்டத்தில் மாற்றம்: புதிய குடியிருப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டமூலம் குறித்து மக்கள் கருத்து கோரல்!

இலங்கையில் 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள பழைய வாடகைச் சட்டத்தை நீக்கிவிட்டு, உரிமையாளர் மற்றும்...

26 6981e649399d3
செய்திகள்இலங்கை

பெண் காவலரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கான்ஸ்டபிளுக்கு மரண தண்டனை!

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு கோட்டை பகுதியில் பெண் காவலர் ஒருவரைக் கொடூரமாகக் கொலை...

20260203 141546
செய்திகள்அரசியல்இலங்கை

இனவாதமற்ற நாடு என்பது அரசின் போலிப் பிரச்சாரம்! – சுதந்திர தினத்தைக் கரி நாளாக அனுஷ்டிக்க ரெலோ தீர்மானம்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் “இனவாதமற்ற, மதவாதமற்ற நாடு” என்ற கோஷம் ஒரு போலிப் பிரச்சாரம்...

1006733 stalin
செய்திகள்இலங்கை

தமிழக மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஸ்டாலின் நினைத்தால் முடியும்! – வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் காட்டம்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் இந்தியக் கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து முன்னெடுக்கும் அடாவடித்தனங்கள் குறித்து அரசாங்கமும், கடற்றொழில்...