யாழில் பணத்திற்காக முதியவரை கடத்திய பெண்
இலங்கைசெய்திகள்

யாழில் பணத்திற்காக முதியவரை கடத்திய பெண்

Share

யாழில் பணத்திற்காக முதியவரை கடத்திய பெண்

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில், பணத்திற்காக முதியவர் ஒருவரை கடத்திய பெண்ணை தேடி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனக்கு சொந்தமான காணியை அப்பகுதியை சேர்ந்த பிரிதொரு பெண்ணுக்கு விற்பனை செய்வதற்காக முன்பணமாக 15 இலட்சம் ரூபாவினை பெற்றுக்கொண்டுள்ளார்.

எனினும் குறித்த முதியவர் நீண்டகாலமாக காணியை விற்பனை செய்யவில்லை என்பதோடு பணத்தை மீளக்கொடுப்பதற்கும் தாமதப்போக்கினை கடைபிடித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்தப் பெண், ஆண்கள் நால்வரின் உதவியுடன் முதியவரை கடத்தி அச்சுறுத்தியதோடு தாக்கியும் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

இது குறித்து முதியவர் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உள்ளிட்ட ஐவரும் தலைமறைவாகியுள்ளதுடன் அவர்களை கைது செய்ய காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 157
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கரடி பொம்மைக்குள் ‘ஐஸ்’ போதைப்பொருள் கடத்தல்: காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் விளக்கமறியலில்!

கொரியர் சேவை ஊடாக கரடி பொம்மைக்குள் மறைத்து ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...

world 156
செய்திகள்இலங்கை

ஆசியக் கிண்ணத் தொடருக்கு இலங்கை ஹாக்கி அணி தகுதி: வெள்ளிப் பதக்கத்துடன் வீரர்கள் தாயகம் திரும்பினர்!

தாய்லாந்தில் நடைபெற்ற 8-வது ஆசியக் கிண்ணத் தகுதிகாண் ஹாக்கி போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்த இலங்கை...

world 155
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தளத்தில் கடும் மழை: மின்னல் தாக்கித் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது!

புத்தளம், கடையாகுளம் பகுதியில் திங்கட்கிழமை (13) இரவு ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாகத் தென்னை மரம்...

world 154
செய்திகள்உலகம்

திருத்தந்தை பதினான்காம் லியோ ஆப்பிரிக்கா வருகை: அல்ஜீரியாவில் உற்சாக வரவேற்பு!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஆப்பிரிக்க நாடுகளுக்கான தனது வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தூதுப் பயணத்தை நேற்று...