299856977 745698496928014 8772727892376519585 n e1660654569376
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். மாவட்ட கடற்தொழிலாளர்களுக்கு எரிபொருள்!

Share

அண்மையில் கடற்தொழிலாளர்களுக்கென எரிபொருள் விநியோகம் இடம்பெற்றபோது, யாழ் மாவட்ட மீனவர்களுக்கு குறைந்தளவு எரிபொருளே வழங்கப்பட்டதாக மீனவ சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் இவ்விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு 25 லீற்றர் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட நிலையில், யாழ் மாவட்ட மீனவர்களுக்கு 6 லீற்றர் மட்டுமே வழங்கப்பட்டு ஓரங்கட்டபட்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் உரிய கவனமெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடற்தொழில் துறைமுகங்கள் அதிகார சபையினால் வழங்கப்படும் எரிபொருள் விநியோகத்தை யாழ் மாவட்ட மீனவர்களுக்காக குருநகர் துறைமுக MPCS ஊடாக விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...