1721753565 INDIA LARGEE
இலங்கைசெய்திகள்

எல்லை தாண்டிய மீன்பிடி: 23 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் ஜனவரி 21 வரை நீடிப்பு!

Share

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஜனவரி 21-ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் அத்துமீறி மீன்பிடித்த போது, கடந்த டிசம்பர் 27, ஜனவரி 2 மற்றும் ஜனவரி 3 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படையினரால் இவர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டனர்.

ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களை, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இன்று (07) காலை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபர்களான இந்திய மீனவர்கள் 23 பேரையும் மேலும் 14 நாட்களுக்கு (ஜனவரி 21 வரை) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தொடர்ச்சியான முறைப்பாடுகள் எழுந்து வரும் நிலையில், இந்த சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...