யாழ். தனியார் விடுதி நீச்சல் தடாகத்தில் சடலம் மீட்பு

யாழ் நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதியின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 பேர் தங்கியிருந்த நிலையில், இரவு 1 மணிக்கு பின்னர்
நீச்சல் தடாகத்தில் நீராட சென்றிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், விடுதி நிர்வாகத்தினர் இன்று காலை நீச்சல் தடாகத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் மிதப்பதை அவதானித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்திருந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் கொலையா அல்லது இயற்கையான இறப்பா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG 20220402 WA0008

#SriLankaNews

Exit mobile version