image 6483441 3 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பல்கலையில் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்பு பட்ட கற்கை நெறி ஆரம்பம்!

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்பு (Bachelor of Science Honors in Physical Education) கற்கைநெறிக்கு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையிலும், விளையாட்டுத்துறை சார் திறமையின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு (Orientation Programme) இன்று (20) புதன்கிழமை இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானபீடத்தின் விளையாட்டு விஞ்ஞானத்துறை தலைவர் கலாநிதி சி.சபா ஆனந் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, முன்னாள் துணைவேந்தரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினருமான சிரேஷ்ட பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பொ. பாலசுந்தரம்பிள்ளை, இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடாதிபதி திருமதி தெய்வி தபோதரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

இவர்களுடன், பல்கலைக்கழகத்தின் பதிவாளர், நிதியாளர், நூலகர், மாணவர் நலச்சேவைகள் பணிப்பாளர், மாணவர் நலச்சேவைகள் உதவிப்பதிவாளர் உட்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டு புதுமுக மாணவர்களுக்கு பல்கலைக்கழக நடைமுறைகள் மற்றும் மாணவர் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.

நிகழ்வில் பீடாதிபதிகள், முன்னாள் விளையாட்டு விஞ்ஞானத் துறை இணைப்பாளர்கள், உடற்கல்வி அலகின் பணிப்பாளர் மற்றும் பயிற்றுநர்கள், விரிவுரையாளர்கள், முன்னாள் மாவட்ட விளையாட்டு அதிகாரிகள், விளையாட்டு விஞ்ஞானத் துறையின் உயர் டிப்ளோமா மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

image 6483441 1 image 6483441 2 1 image 6483441 4

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...