யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர்களால் கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களினால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி முன்றலில் ஆசிரியர்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இதன்போது ஆசிரியர்களின் உரிமைகளுக்காக போராடும் ஜோசப் ஸ்டாலினை கைது செய்தமை வேதனை அளிக்கிறது எனவும், அவரது கைதிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

IMG 20220808 WA0170

#SriLankaNews

Exit mobile version