Subramaniyam
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எங்களுக்குப் பிச்சை போட்டதாகக் கூறுவது கேவலமானது!!

Share

தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் எமது புலத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவரும், மாதகல் மேற்கு கிராமிய அபிவிருத்தி கடற்றொழில் அமைப்பின் தலைவருமான என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

தினமும் எமது கடற்பரப்பில் வருடமொன்றிற்கு 144 தடவைகள் வந்து எமது வளங்களை அழிக்கிறார்கள். இது வருடக்கணக்கில் பார்க்கும்போது, எமது வளங்களை களவாடிச் செல்லும் தொகையானது 900 மில்லியனுக்கும் அதிகமானது.

எமது போராட்டத்திற்கு வழங்கிய சொற்ப பணத்தை முன்னிறுத்தி, எமக்கு உதவிகளை வழங்கியதாக கூறுவது மிகவும் கேவலமான விடயம். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

உண்மைக்குப் புறம்பான போராட்டதை நடத்துபவர்கள் உண்மையான தமிழர்கள் அல்ல.

இந்தக் கடலை நம்பி எமது வாழ்வாதாரம் தங்கியுள்ளது. எமது வளங்களைச் சூறையாடிவிட்டு, அதில் நீங்களும் சம்பாதித்துவிட்டு, எங்களுக்குப் பிச்சை போட்டதாகக் கூறுவது மிகவும் கேவலமானது என்றும் அவர் மேலும் கூறினார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
WhatsApp Image 2024 08 02 at 17.13.20
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பெற்றோருக்குச் சுமையற்ற, நவீன கல்வி முறை – ஜனாதிபதி அநுர குமார!

பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையையும், பிள்ளைகளுக்குத் துயரத்தையும் தராத ஒரு புதிய கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக...

images 2026 01 03t094503424 26244
உலகம்செய்திகள்

Grok AI-க்கு உலகளாவிய தடை மற்றும் கட்டுப்பாடுகள்: ‘டீப்ஃபேக்’ விவகாரத்தால் ஈலான் மஸ்க் பணிந்தார்!

ஈலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘Grok’ செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகச்...

MediaFile 8 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் ஊழல் நிறைந்தது: அமைச்சர் குமார ஜயகொடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால்!

தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி விலைமனுக் கோரலில் (Coal Tender) பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள...

1500x900 44538875 ipl2026
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல் 2026: சின்னசுவாமி மைதானத்திலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி! – ராஜஸ்தான் அணியும் இடம் மாறுகிறது.

ஐ.பி.எல் 2026 தொடரில் முன்னணி அணிகளான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்...