Ranil
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

என் கனவை நொருக்கியது புலிகளின் தலைவர் பிரபாகரன் தான்- ரணில் பகிரங்கம்

Share

ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனே தீவிரமாக ஈடுபட்டார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்கான முயற்சிகள் நகர்த்தப்பட்டது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவால் ஏன் இன்னமும் ஜனாதிபதியாக முடியவில்லை என்று கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நான் இரு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். 1994இல் சந்திரிகா மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் முடிவு மாறியது.

அதனையடுத்து 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் என்னைத் தோற்கடிப்பதற்குத் புலிகளின் தலைவர் பிரபாகரனே தீவிரமாகச் செயற்பட்டார் என்று கூறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், இனிவரும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடுவதா என்பது தொடர்பில் நான் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...