271685307 233777708936780 8419350423807055955 n
இலங்கைஅரசியல்செய்திகள்

ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்குவது அனைவரதும் கடமை! – ஞானதிலக்க தேரர்

Share

ஜனாதிபதியின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு “ஒத்துழைப்பு வழங்குவது பொதுமக்களின் கடமை மற்றும் பொறுப்பாகும் என ஈத்தலவெட்டுனுவெவே ஞானதிலக்க தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று முற்பகல் மிரிசவெட்டிய விஹாராதிகாரி தேரரைச் சந்தித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனம் தெரியாத தொற்றுநோயிலிருந்து மக்களைக் காப்பாற்றி மக்கள் உயிர்வாழும் சுதந்திரத்தை இருமுறை வழங்கிய ஜனாதிபதியின் எதிர்காலத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும்.

இந்நாடு பெரும் கடன் சுமையை எதிர்கொண்டுள்ளது. ஆனால் அதையெல்லாம் சமாளித்து, தொற்றுநோய்க்கு அச்சப்படாமல் மக்கள் சுதந்திரமாக வாழ வாய்ப்பளித்திருப்பது, ஏனைய உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் மக்களின் வாழ்க்கை முறையைக் கொண்டுசெல்வதற்கு ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் ஆத்ம சக்தியாக அமைந்துள்ளன.

நாட்டை மீண்டும் மூடுவதற்கு இடமளிக்காமல் சுய ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். பொருளாதாரத்தை நிர்வகித்துக்கொண்டு தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை முன்னேற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது அனைவரதும் கடமையும் பொறுப்புமாகும். – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 10
இலங்கைசெய்திகள்

நீர் கட்டண உயர்வு இல்லை: ஜூன் மாதம் கட்டணத் திருத்தம் – அமைச்சர் சுசில் ரணசிங்க!

தற்போதைய சூழலில் நீர் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்று வீடமைப்பு, நிர்மாண மற்றும்...

08 10
செய்திகள்இலங்கை

இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவல் தீவிரம்: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனால் உயிரிழந்தவர்களின்...

06 10
செய்திகள்விளையாட்டு

ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு: பயணச் சிக்கல்களால் நேர்ந்த மாற்றம்!

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர், தவிர்க்க முடியாத...

05 11
செய்திகள்இலங்கை

லிட்ரோ எரிவாயு விலை உயர்வு: 12.5 கிலோ சிலிண்டர் புதிய விலை ரூ. 3,990 ஆக அதிகரிப்பு!

உலக சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, மார்ச் 10, 2026 நள்ளிரவு...