அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டின் இன்றைய நிலைக்குக் காரணமானவர்கள் பதவி விலகுவதே சிறந்தது! – ஹர்த்தாலுக்கு இ.த.ஆ.சங்கம் பூரண ஆதரவு

Share
153224 strike
Share

நாட்டின் இன்றைய நிலைக்கு காரணமானவர்கள் பதவிவிலக வேண்டுமென்பதே நாட்டில் உள்ள பெருபான்மையானோரின் கோரிக்கை.

இந்தக் கோரிக்கையை ஏற்று தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்து, நாளையதினம் (28.04.2022) பணிப்பகிஸ்கரிப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனை அனைவரும் ஏற்று பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், இதைவிட ஒட்டு மொத்த மக்களையும் இணைத்து ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்த எதிர்வரும் 06.05.2020 (வெள்ளிக்கிழமை) நடைபெறும் பொதுக் ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த இரண்டு நாட்களும் அதிபர்கள், ஆசிரியர்கள் கடமைக்குச் செல்லாது. அதிபர்கள் கல்வித் திணைக்களத்திற்கும், ஆசியர்கள் அதிபர்களுக்கும் தமது விடுமுறையை அறிவிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம் – எனவும் தெரிவித்துள்ளது.

இனி வரும் காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில் எமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்றும் போராட்ட வடிவம் மாற்றப்பட வேண்டும் என்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பிடம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
7 8
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தான்(Pakistan) மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களில் ஒன்பது இலக்குகள் மீது ஏவுகணைத்...

2 16
இலங்கைசெய்திகள்

வடக்கில் தமிழ் கட்சிகள் ஆதிக்கம்! பெரும்பான்மையை இழந்த ஆளும் கட்சி!

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து...

2 14
இலங்கைசெய்திகள்

இதுவரையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் கட்சிகள் விபரம்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, இன்று...

2 16
இலங்கைசெய்திகள்

தமிழரசு கட்சி ஆதிக்கம்! யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர...