16 5
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சிரமத்திற்கு உள்ளாக்கிய கடவுச்சீட்டு விவகாரம்!

Share

ஜனாதிபதியை சிரமத்திற்கு உள்ளாக்கிய கடவுச்சீட்டு விவகாரம்!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள(Department of Immigration and Emigration) உயர் நிர்வாகம் வழங்கிய தவறான தகவல்களே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை சிரமத்திற்கு உள்ளாக்கியதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பில் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் வெளியிட்ட விசேட அறிக்கையில் இந்த விடயம ்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய உண்மை நிலையை காட்டுவதற்கும், நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிடப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரவுகளையும் தகவல்களையும் திணைக்களம் கொண்டிருந்தாலும், அது அரசாங்கத்தின் முழுப் பங்கில் மூன்றில் ஒரு பங்கை உள்ளடக்கிய மிகவும் பொறுப்பான பாத்திரத்தில் ஈடுபட்டுள்ள விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு எவ்வளவு கடுமையாக இருந்தாலும் திணைக்கள அதிகாரிகளால் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவது தொடர்பாக உண்மையான நிலைமை வெளிப்படுத்தாமை வருத்தமளிக்கிறது என்றும் இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.

பழைய அரசியல் அதிகாரத்தின் விசுவாசத்தின் அடிப்படையில் பதவிகளைப் பெற்ற சில உயர்மட்ட நபர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளை பேணுவதன் மூலம் இந்த நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கிய இதுபோன்ற அதிகாரிகள் யார் என்பதை வெளிப்படுத்துவது சங்கத்தின் பொறுப்பாகும் எனவும், அதற்காக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்க இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்த நிலையில், வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திணைக்கள அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...