rtjy 129 scaled
இலங்கைசெய்திகள்

இஸ்ரேல் மீது பிரான்ஸ் ஜனாதிபதி கடும் கண்டனம்

Share

இஸ்ரேல் மீது பிரான்ஸ் ஜனாதிபதி கடும் கண்டனம்

காசாவில் குழந்தைகள் மற்றும் பெண்களைக் கொல்வதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இஸ்ரேலின் குண்டுதாக்குதல்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அங்கீகரிக்கும், அதே வேளையில் காசாவில் நடைபெறும் குண்டுத் தாக்குதல்களை நிறுத்துமாறு நாங்கள் அவர்களை வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

காசாவில் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை உயர்ஸ்தானிகரகத்தின் தலைவர் வொல்கர் டேர்க் இக் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

காசா பகுதியில் இஸ்ரேல் மற்றும் இரு தரப்பினரும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண பொது மக்களை பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளை இருதரப்பும் உடனடியாக நிறுத்தி சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு காசாவின் சில பகுதிகளிலும் நாளாந்தம் நான்கு மணி நேரத்திற்கு இராணுவ நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனினும் இந்த நடைமுறையினை போர் நிறுத்தம் அல்ல குறிப்பிட்ட இந்த கால பகுதியினில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்கள் என கருதும் இடங்களை நோக்கி நகர முடியும் எனவும் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, காசாவில் உள்ள மூன்று வைத்தியசாலைகளுக்கு அருகில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக காசாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....