rtjy 329 scaled
இலங்கைசெய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : இலங்கைக்கு பெரும் ஆபத்து

Share

இஸ்ரேல் – ஹமாஸ் போர் : இலங்கைக்கு பெரும் ஆபத்து

ஐரோப்பாவில் இருந்து கப்பல்கள் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதாக சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் – பலஸ்தீன போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஐரோப்பாவையும் கிழக்கையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் ஊடாக பயணிக்கும் கப்பல்களை இறக்குமதி செய்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் சர்வதேச காப்புறுதி நிறுவனங்கள் விசேட இடர் கட்டணத்தை விதித்துள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சில காப்புறுதி நிறுவனங்கள் இடர் காப்புறுதி விகிதங்களை வெகுவாக அதிகரித்துள்ளதாக இலங்கையிலுள்ள முக்கிய சர்வதேச வர்த்தக நிறுவனம் ஒன்றின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சூயஸ் கால்வாய் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில், சூயஸ் கால்வாய் ஊடாக செல்லும் கப்பல்களின் கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள், எரிவாயு மற்றும் வாகனங்களுக்கு 15 சதவீத கட்டணமும், ஏனைய சரக்கு கப்பல்களுக்கு 5 சதவீத கட்டணமும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, காப்பீட்டு நிறுவனங்கள் இடர் கட்டணங்களை அதிகரித்துள்ளன.

இதற்கிடையில், போர் தீவிரமடையும் பட்சத்தில், சூயஸ் கால்வாய் ஊடான போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டு இஸ்ரேலிய வான்வெளி மூடப்படலாம் என உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்நிலையில், ஆசிய நாடுகளில் இறக்குமதி பொருட்களின் விலை மேலும் உயரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...