7 9
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தல் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள அடுத்த நகர்வு

Share

பொதுத் தேர்தல் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள அடுத்த நகர்வு

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளை சேர்ந்த கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 8 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அண்டைய நாடுகள் மற்றும் ரஷ்யாவிலிருந்து குறித்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பின் கண்காணிப்பாளர்களும் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் கடந்த மதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போதும் பல நாடுகளை சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...