courts
அரசியல்இலங்கைசெய்திகள்

22 மீதான விசாரணைகள் நிறைவு!

Share

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 9 மனுக்கள் மீதான விசாரணை நேற்றுநிறைவடைந்துள்ள நிலையில் அந்தத் தீர்ப்பை விரைவில் சபாநாயகருக்கு அனுப்ப உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேற்படி மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினமும் நேற்றும் உச்ச நீதிமன்றத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதிபதிகளான புவனேக அலுவிஹார மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் மீதான விசாரணை இரண்டாவது நாளாகவும் நேற்று இடம்பெற்றது.

வினிவித்த பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு உள்ளிட்ட ஒன்பது பேர் மேற்படி மனுக்களை தாக்கல் செய்திருந்ததுடன் மனுக்களில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்தார். அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக அந்த மனுக்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, அந்த சட்டமூலத்தின் சரத்துக்களை நிறைவேற்ற வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலும் சர்வஜன வாக்கெடுப்பு மூலமும் அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் குறித்த மனுக்கள் மூலம் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின்...

17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...