செய்திகள்அரசியல்இலங்கை

சர்வதேச ஒத்துழைப்பு ஒருபோதும் கிடைக்காது! – அழுத்திக் கூறுகிறார் லக்‌ஷ்மன் கிரியல்ல

Share
lakshman kiriella
Share

” சிறுபான்மையின மக்களை புறக்கணிக்கும் அரசால் ஒருபோதும் சர்வதேச ஒத்துழைப்பை பெறமுடியாது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர்,

” நல்லாட்சிமீது சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை இருந்தது. தேசிய கீதம்கூட தமிழில் இசைக்கப்பட்டது. இதனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜி-7 நாடுகளின் தலைவர்கள்கூட உரிய இடத்தை வழங்கினர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது?

சிவில் அமைப்புகளுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் அறிக்கை விட்டால், அது தொடர்பில் சிஐடிக்கு அழைக்கப்பட்டு விளக்கம்கோரும் நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலைமை மாறவேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்கூட இவ் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...