world bank 20220162151
இலங்கைசெய்திகள்

நாட்டில் தீவிரமடையும் வேலையின்மை, வருமான இழப்புகள்!!!! – உலக வங்கி

Share

2023ஆம் ஆண்டும் அதற்குப் பின்னரும் இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் என்று இலங்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையில் உயர்ந்துள்ள நிதித் துறையின் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிலையற்ற அரசியல் நிலைமை என்பன நாட்டின் பொருளாதாரக் கண்ணோட்டத்துக்கு குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துவதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திற்கான மூல காரணங்களைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ள உலக வங்கி, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வெளி மற்றும் சில உள்நாட்டு கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

2022ஆம் ஆண்டில் 7.8 சதவீதம் சுருங்குவதைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டில் பொருளாதாரம் 4.3 சதவிகிதம் சுருங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவை தொடர்ந்து குறைந்து வருவதால், வேலை மற்றும் வருமான இழப்புகள் தீவிரமடைகின்றன என்றும் விநியோகத் தடைகள் உற்பத்தியை மோசமாக பாதிக்கின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு வலுவான மற்றும் நம்பகமான கட்டமைப்பு சீர்திருத்தத் திட்டம் நீண்டகால நெருக்கடியைத் தவிர்க்கவும் தற்போதைய பொருளாதார சிக்கல்களின் மூல காரணங்களை நிவர்த்தி செய்யவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளது.

இந்த நெருக்கடியை வலுவான மற்றும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக  இலங்கை பயன்படுத்திக்கொள்ள முடியும் என உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

tjv16cjg mohsin naqvi shahbaz sharif 625x300 26 January 26
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் 2026: பாகிஸ்தான் பங்கேற்பதில் சிக்கல்? பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் இன்று அவசரச் சந்திப்பு!

இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது...

images 9 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புற்றுநோய் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு: சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்து குறித்து CID-யில் முறைப்பாடு!

நாட்டின் புற்றுநோய் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் வெளிச்சந்தையில் விற்கப்படும் தரமற்ற மருந்துகள் தொடர்பாக...

DxCjISGeXs
இந்தியாசெய்திகள்

ஆசியாவில் நிபா வைரஸ் அச்சம்: முக்கிய வானூர்தி நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் – 75% உயிரிழப்பு விகிதம் கொண்ட உயிர்கொல்லி!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா (Nipah) வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து,...